Monday, December 21, 2015

இன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்

உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்'ஒருவர் சீனிவாச ராமானுஜம்.இளைஞர்களிடம் கணித ஆர்வத்தைவளர்க்கும் வகையில்
இவரது பிறந்த தினம் 'தேசிய கணிததினமாக' 2011ல் இருந்துகடைப்பிடிக்கப்படுகிறது.

வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்குஉண்டுஅறிவியலுக்கு அன்னையாகஇருப்பது கணிதம்இதுதவிர அனைத்துதுறைகளிலும் கணிதம் முக்கியமானதாகவிளங்குகிறதுஉலகின் ஆரம்பகாலகணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறுபங்களிப்பை செய்துள்ளதுபூஜ்யத்தைஉலகுக்கு அறிமுகம் 
செய்தது இந்தியாதான்.


ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நுாற்றாண்டில் கணிதத்துறையில்இந்தியா பின்தங்கியதுஇந்நிலையில் ராமானுஜம் மூலம் 20ம்நுாற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத்தொடங்கியது.யார் இவர்?: ஆர்க்கிமிடிஸ்நியூட்டன் போன்றவிஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு.இவர் 1887 டிச., 22ல்ஈரோட்டில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன், 3வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார்பள்ளியில் சேர்ந்த பின்பேச்சு வந்தது.

ஒருநாள் ஆசிரியர் 'பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லைஎன கூறினார்.உடனே, ''பூஜ்யத்திற்கு இடதுபக்கம் 1 சேர்த்தால் 10 வருகிறதே,'' எனபதிலளித்தார்அதே போல, 'ஒரு எண்ணை அதே எண்ணால்வகுத்தால் 1 வரும்என ஆசிரியர் பாடம்நடத்தினார்.உடனேராமானுஜம்,''பூஜ்யத்தை பூஜ்யமால் வகுத்தால் 1 வருமா?'' எனகேட்டார்அப்போது அவரது வயது 10 தான். 12வது வயதில் கணிதநூல்களை தேடித்தேடி படித்தார்விடை காண முடியாத 6 ஆயிரம்தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார்.அப்போது 'மெட்ராஸ்போர்ட் டிரஸ்ட்டில்ராமானுஜத்துக்கு வேலை கிடைத்ததுஇங்குராமானுஜரின் கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேலாளர்எஸ்.என்.அய்யர்அவர் தயாரித்த சில முக்கிய தேற்றங்களையும்,நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார்இதற்குஎந்த பதிலும் இல்லை.

இருப்பினும் 1913ல் ராமானுஜம்கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டிஎன்பவருக்கு சில கணித இணைப்புகளை அனுப்பி வைத்தார்இதைகண்ட ஹார்டி, 'இது சாதாரண மனிதரது அல்லஒரு மேதையின்படைப்புஎன வியந்தார்ராமானுஜத்தை உடனேயே கேம்பிரிட்ஜ்பல்கலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்இதனை ஏற்று 1914ம்ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின் திறமை சிலநாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்ததுஉணவு பிரச்னைவீட்டுநினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்குஒத்துவரவில்லைஉடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட, 1917ல்இந்தியா திரும்பினார். 1920 ஏப்., 26ல் மறைந்தார்.

No comments:

Post a Comment