Wednesday, November 11, 2015

ஆசிரியர்கள் உயர்கல்வி பயில முன் அனுமதி கட்டாயம்.

 தமிழகத்தில் செயல்படும்அரசு மற்றும் அரசு உதவிபெறும்ஆசிரியர்கள் உயர்கல்வியை தொடரமுன் அனுமதி பெறுவதுகட்டாயம் எனதகவல்
அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  அரசுஅரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்,நேரடியாக உயர்கல்வியை தொடரஅரசு தடை விதித்துள்ளது.ஆனால்பகுதி நேரமாகவோதொலை துார கல்வி மையங்கள்வாயிலாகவோ உயர்கல்வியை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பதவி உயர்வுஊக்க ஊதியம் போன்வற்றுக்கு கல்வி தகுதிகள்மதிப்பீடு செய்யப்படுகிறதுஇதன் காரணமாகஅரசு பணியில் சேரும்பலர் உயர்கல்வியை பகுதி நேரமாகவும்தொலைதுாரக்கல்விவாயிலாகவும் தொடர்ந்து வருகின்றனர்ஆனால்துறை அனுமதிஇன்றி உயர்கல்வியில் சேர்பவர்கள்பல்வேறு சிக்கல்களைஎதிர்கொள்ள வேண்டியுள்ளதுஇதனால்உயர்கல்வி பயில விரும்பும்ஆசிரியர்கள் முன் அனுமதி பெறுதல் தொடர்பாகவும்யாரிடம்பெறவேண்டும் என்பது குறித்து குழப்பங்கள் எழுந்ததால்தகவல்அறியும் உரிமைச்சட்டத்தில்கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசுபள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் தகவல்கள் பெறப்பட்டதுஅதன் படி,எம்.பில்., பிஎச்.டி., போன்ற ஆராய்ச்சி படிப்புகளில் சேர்பவர்கள் துறைதலைவரான பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் முன் அனுமதிபெற்று இருப்பது அவசியம்பி.எட்., எம்.எட்., போன்ற படிப்புகளுக்கு,பள்ளி தலைமையாசிரியரிடமே முன் அனுமதி பெற்றிருந்தால்போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment